தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார் ஹன்சிகா. 'சேட்டை', 'வாலு', 'சிங்கம்-2', 'வேட்டைமன்னன்' படங்களில் தற்போது நடித்து வருகிறார். வெங்ட்பிரபு இயக்கும் 'பிரியாணி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் ஹன்சிகா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
என் அழகு ரகசியம் சிரிப்புதான். கோபமே வராது. மற்றவர்கள் திட்டினாலும் சிரித்துக் கொண்டே இருப்பேன். தினமும் காலை 6 மணிக்கு எழுந்திருப்பேன். சொன்ன நேரத்துக்கு சூட்டிங் போயிடுவேன்.
காஜல் அகர்வால், தமன்னா இருவரும் எனக்கு நெருங்கிய தோழிகள். நடிகைகளுக்குள் போட்டி பொறாமை இருப்பதாக கிசுகிசுக்கள் வருகின்றன. ஆனால் நான் பார்த்தவரை யாரும் போட்டியாக நினைப்பது இல்லை. எல்லா நடிகைகளும் நட்பாகத்தான் பழகுகிறார்கள்.
விரைவில் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். சமுகசேவையில் நாட்டம் உண்டு. 22 குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். அவர்களின் சாப்பாடு, படிப்பு செலவு, துணிமணிகள் எல்லாவற்றையுமே நானே கவனித்துக் கொள்கிறேன்.
சிறுவயதில் பண்டிகை நாட்களில் எனது அம்மா அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு என்னை அழைத்து செல்வார். அங்கே தான் பண்டிகைகளை கொண்டாடுவோம். அப்போது இருந்தே ஆதரவற்றவர்கள் மேல் எனக்கு பாசம் வளர்ந்துள்ளது.
வயதானவர்களை அவர்களின் பிள்ளைகளே ஒதுக்கி வைப்பது வேதனை அளிக்கிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்க அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். இதுபோல் கைவிடப்படுகிறவர்களுக்காக முதியோர் இல்லம் கட்ட திட்டமிட்டு உள்ளேன். சென்னை அல்லது ஐதராபாத்தில் இந்த இல்லத்தை கட்டுவேன். அதற்காக இப்போது இருந்தே பணம் சேர்க்கிறேன்.
எனக்கு கடவுள் நம்பிககை உண்டு. புத்த மதத்தின் கொள்கைகள் பிடிக்கும். தமிழ்நாட்டில் ரசிகர்கள் எனக்கு கோவில் கட்ட முயற்சிக்கின்றனர். குஷ்பு கோவிலுக்கு பக்கத்திலேயே எனக்கு கோவில் கட்டுவதாக சொன்னார்கள். அனுமதி கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது.
என்மேல் அவர்கள் வைத்துள்ள அன்பை கண்டு நெகிழ்ந்தேன். அதேசமயம் கடவுளுக்கு இணையாக என்னை பார்ப்பது சரியல்ல என்று கோவில் கட்ட வேண்டாம் என தடுத்து விட்டேன். அரசியலில் ஈடுபட எனக்கு ஆர்வம் இல்லை.
25 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனது தாய் கண்டிப்பாக கூறி உள்ளார். நிறைய பேர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஒருவர் எனக்கு இரண்டு ‘பிஎம்டபிள்யூ’ கார் இருக்கிறது. திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்றார். இன்னொருவர் தனக்கு நான்கைந்து வீடுகள் இருப்பதாக சொல்லி அணுகினார். யாரையும் இதுவரை காதலிக்கவில்லை.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
இந்நிலையில் ஹன்சிகா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
என் அழகு ரகசியம் சிரிப்புதான். கோபமே வராது. மற்றவர்கள் திட்டினாலும் சிரித்துக் கொண்டே இருப்பேன். தினமும் காலை 6 மணிக்கு எழுந்திருப்பேன். சொன்ன நேரத்துக்கு சூட்டிங் போயிடுவேன்.
காஜல் அகர்வால், தமன்னா இருவரும் எனக்கு நெருங்கிய தோழிகள். நடிகைகளுக்குள் போட்டி பொறாமை இருப்பதாக கிசுகிசுக்கள் வருகின்றன. ஆனால் நான் பார்த்தவரை யாரும் போட்டியாக நினைப்பது இல்லை. எல்லா நடிகைகளும் நட்பாகத்தான் பழகுகிறார்கள்.
விரைவில் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். சமுகசேவையில் நாட்டம் உண்டு. 22 குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். அவர்களின் சாப்பாடு, படிப்பு செலவு, துணிமணிகள் எல்லாவற்றையுமே நானே கவனித்துக் கொள்கிறேன்.
சிறுவயதில் பண்டிகை நாட்களில் எனது அம்மா அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு என்னை அழைத்து செல்வார். அங்கே தான் பண்டிகைகளை கொண்டாடுவோம். அப்போது இருந்தே ஆதரவற்றவர்கள் மேல் எனக்கு பாசம் வளர்ந்துள்ளது.
வயதானவர்களை அவர்களின் பிள்ளைகளே ஒதுக்கி வைப்பது வேதனை அளிக்கிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்க அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். இதுபோல் கைவிடப்படுகிறவர்களுக்காக முதியோர் இல்லம் கட்ட திட்டமிட்டு உள்ளேன். சென்னை அல்லது ஐதராபாத்தில் இந்த இல்லத்தை கட்டுவேன். அதற்காக இப்போது இருந்தே பணம் சேர்க்கிறேன்.
எனக்கு கடவுள் நம்பிககை உண்டு. புத்த மதத்தின் கொள்கைகள் பிடிக்கும். தமிழ்நாட்டில் ரசிகர்கள் எனக்கு கோவில் கட்ட முயற்சிக்கின்றனர். குஷ்பு கோவிலுக்கு பக்கத்திலேயே எனக்கு கோவில் கட்டுவதாக சொன்னார்கள். அனுமதி கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது.
என்மேல் அவர்கள் வைத்துள்ள அன்பை கண்டு நெகிழ்ந்தேன். அதேசமயம் கடவுளுக்கு இணையாக என்னை பார்ப்பது சரியல்ல என்று கோவில் கட்ட வேண்டாம் என தடுத்து விட்டேன். அரசியலில் ஈடுபட எனக்கு ஆர்வம் இல்லை.
25 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனது தாய் கண்டிப்பாக கூறி உள்ளார். நிறைய பேர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஒருவர் எனக்கு இரண்டு ‘பிஎம்டபிள்யூ’ கார் இருக்கிறது. திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்றார். இன்னொருவர் தனக்கு நான்கைந்து வீடுகள் இருப்பதாக சொல்லி அணுகினார். யாரையும் இதுவரை காதலிக்கவில்லை.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !