
கடாபியின் பெண் பாதுகாவலர்கள் அனைவருமே கன்னி கழியாதவர்கள் என்பதும் தூய்மையாகவும், புனிதமாகவும் இருப்பார்கள் என்று சபதம் செய்து கொள்கின்றனர் என்பதும் முதலாவது தகவல்.
இவர்கள் அனைவரும் திறம்பட போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டவர்கள் என்பது இரண்டாவது தகவல். மெய்ப் பாதுகாவலர்கள் ஆக்குகின்றமை மூலம் பெண்களுக்கு உயரிய கௌரவத்தை வழங்குகின்றார் என கடாபி நம்பி இருந்தார். பெண்களுக்கு கட்டாயம் போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும், அப்போதுதான் எதிரிகளுக்கு இரையாகின்றமையில் இருந்து பெண்கள் தப்பிக் கொள்ள முடியும் என்று கடாபி அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றார்.
இப்பதவிக்கு பெண்கள் கடாபியினால் தனிப்பட தெரிவு செய்யப்படுகின்றனர் என்பது மூன்றாவது தகவல். இவர்கள் கடாபியினால்தான் நேரடியாக வழி நடத்தப்பட்டனர். இவர்களுக்கான கடமைகள் மற்றும் இலக்குகள் கடாபியினால்தான் தீர்மானிக்கப்பட்டன. இப்பாதுகாவலர்கள் உதட்டுச் சாயம் பூசுகின்றமைக்கும், நகைகள் அணிகின்றமைக்கும், நகங்களை சாயம் பூசி பளபளப்பாக்குகின்றமைக்கும், உயரமான ஹீல்ஸ் அணிகின்றமைக்கும் அனுமதிக்கப்பட்டு வந்திருக்கின்ற போதிலும் பக்குவப்படுத்தி எடுக்கப்பட்ட கொலையாளிகள்.
கடாபிக்காக உயிரையும் கொடுப்பார்கள் என்றும் இவரை விட்டு இரவு, பகல்கூட ஒருபோதும் விலக மாட்டார்கள் என்றும் பதவியேற்பின்போது இப்பெண்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்கின்றனர் என்பது நான்காவது தகவல்.
இவர்கள் கடாபி மீது ஒரு வகை பக்தி கொண்டவர்கள் என்பது ஐந்தாவது தகவல். கடாபியின் வாகன தொடரணி ஒன்று 1998 ஆம் ஆண்டு உலா வந்து கொண்டிருந்தபோது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குழு ஒன்று கடாபி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தியது. ஆனால் கடாபியின் பெண் பாதுகாவலர் ஒருவர் குறுக்கால் பாய்ந்து துப்பாக்கிச் சூடுகளை வாங்கிக் கொண்டு உயிரை விட்டு விட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !