Headlines News :
Pin It

Widgets

Home » » திருமலையில் லட்டு விற்பனைக்கு பயோமெட்ரிக் முறைமை!

திருமலையில் லட்டு விற்பனைக்கு பயோமெட்ரிக் முறைமை!

திருமலை ஏழுமலையான் கோயிலில் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் மூலம் லட்டு விற்பனை தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு, திருமலையில் உள்ள அன்னபிரசாத கூடம், தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் பிஆர்ஓ அலுவலகம், கூடுதல் லட்டுகள் விநியோகம் செய்யும் எல்பிடி கவுன்டர் ஆகிய இடங்களில் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தேவஸ்தான கணினி தகவல் தொழில்நுட்பதுறைக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதில், லட்டு கவுன்டரில் 4 லட்டுகள் நூறு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

இதில் முறைகேடாக லட்டு டோக்கன்கள் பெற்று கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கும் வகையில் 15 நாட்களில் பயோமெட்ரிக் மூலம் லட்டு விநியோகிக்கும் திட்டம் தொடர்பாக புதிய சாப்ட்வேரை தயாரிக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த பயோமெட்ரிக் திட்டத்தை கொண்டு, ஒரு பக்தரின் கைரேகையை பதிவு செய்து ஒரு லட்டு டோக்கன் மட்டும் பெற்றுக்கொள்ளும் முறை அமல்படுத்தப்படும் எனவும், பின்னர் அதே பக்தர் முறைகேடாக லட்டு பெறுவதை தடுக்க முடியும், இத்திட்டம் வரும் 15 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருச்சானூர்

திருமலைதிருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17ம்தேதி காலை தேரோட்டமும், இரவு குதிரை வாகன உற்சவம் நடைபெறும்.

18ம்தேதி காலை பல்லக்கு உற்சவம் மற்றும் திருமலை ஏழுமலையானின் சீர்வரிசை ஊர்வலம், சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved