Headlines News :
Pin It

Widgets

Home » » அமெரிக்க பொலிசில் போலிக் கடனட்டைகளுடன் சிக்கிய இலங்கை தமிழர்கள்!

அமெரிக்க பொலிசில் போலிக் கடனட்டைகளுடன் சிக்கிய இலங்கை தமிழர்கள்!

போலியான வங்கி கடன் அட்டைகளை பயன்படுத்தி பணம் பெற்று வந்த இரண்டு இலங்கை தமிழர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க நியூயோர்க்கில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடா ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் தன்னியக்க அட்டை கருவி மையத்துக்கு சென்று அங்கு பல தன்னியக்க அட்டைகளை பயன்படுத்தி பணத்தை பெற்றுள்ளனர்.

இதனை கண்காணித்த நியூயோர்க் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருவரையும் கைது செய்தார்.

இதன்போது அவர்கள் இருவரிடமும் 257 போலி தன்னியக்க கடன் அட்டைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் 55 ஆயிரத்து 689 அமரிக்க டொலர்களும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்படடுள்ளது.

பல காலங்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று நம்பப்படும் இவர்கள் 28 வயதான சிவரூபன் ஞானபண்டிதன், 24 வயதான ராகவன் பத்மசேனன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved