மாத்தளை - மீகஹகொட்டுவ - நுகபிட்டிய பகுதியில் நபரொருவரை கத்தியால் குத்தி
கொலை செய்த சந்தேகநபர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நுகபிட்டிய பகுதியில் 43 வயதுடைய ஒருவர் நேற்று (22) மாலை கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இக்கொலை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி சந்தேகநபரை தேடிச் சென்ற வேளை, 51 வயதான சந்தேகநபர் தனது வீட்டில் விஷம் அருந்திய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் விஷம் அருந்திய நபரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்ததால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று மரண விசாரணை இடம்பெறவுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நுகபிட்டிய பகுதியில் 43 வயதுடைய ஒருவர் நேற்று (22) மாலை கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இக்கொலை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி சந்தேகநபரை தேடிச் சென்ற வேளை, 51 வயதான சந்தேகநபர் தனது வீட்டில் விஷம் அருந்திய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் விஷம் அருந்திய நபரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்ததால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று மரண விசாரணை இடம்பெறவுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !