Headlines News :
Pin It

Widgets

Home » » குடும்ப கட்டுப்பாட்டில் மாற்றம்! - அரசை எச்சரிக்கும் சீனா மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

குடும்ப கட்டுப்பாட்டில் மாற்றம்! - அரசை எச்சரிக்கும் சீனா மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

உலகிலே சீனாவில்தான் மிக அதிகமாக 130 கோடி மக்கள் வசிக்கின்றனர். அங்கு மக்கள் தொகை பிரச்சினையை சரிகட்ட 1980 ஆண்டு முதல் கடந்த 30 வருடங்களாக ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை கம்யூனிஸ்ட் அரசு சட்டமாக்கியுள்ளது. ஒரு குழந்தைக்கு பிறகு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது கட்டாயம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தினால் சீனாவில் 40 கோடி குழந்தைகளின் பிறப்பு தடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் அங்கு மக்கள் தொகை பெருக்கத்தால், எதிர்மாறான வளர்ச்சி, கருத்தரிப்பு பிரச்சினை, மூப்பு அடைதல், ஆண்-பெண் மலட்டுத் தன்மை மற்றும் குழந்தைகளுடன் மக்கள் அதிகம் இடம்பெயர்வதால் ஏற்படும் நகர விரிவாக்கப் பிரச்சினை போன்ற தடைகள் இருப்பதாக சீனா மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதனால் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கைவிட்டு மக்கள் தங்கள் சுய பகுத்தறிவின்படி இந்த விஷயத்தில் செயல்பட விடவேண்டும் என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகள், அறிஞர்கள் கொண்ட உயர்மட்டக்குழு தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் தலைமை இந்த மாதம் மாறவுள்ள நிலையில், அங்கு மக்கள் தொகை குறித்த கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved