Headlines News :
Pin It

Widgets

Home » , » ஆபாச இணையத்தில் இலங்கை யுவதிகள்! தடை குறித்து 14ஆம் திகதி தீர்ப்பு!!

ஆபாச இணையத்தில் இலங்கை யுவதிகள்! தடை குறித்து 14ஆம் திகதி தீர்ப்பு!!

இலங்கை இளைஞர், யுவதிகள் தோன்றும் அடையாளம் காணப்பட்ட ஆபாச இணையத்தளங்களை முடக்குவது குறித்து எதிர்வரும் 14ம் திகதி இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த இணையங்களை தடை செய்வது குறித்த வழக்கு இன்று (31) பத்தரமுல்லை விசேட சிறுவர் நீதிமன்றில் இடம்பெற்றது.

குறித்த இணையத்தளங்கள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இளைஞர், யுவதிகள் தோன்றும் 51 ஆபாச இணையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் விசாரணை பிரிவு தெரிவித்தது.

இந்த இணையங்களை தடை செய்யுமாறு பொலிஸ் விசாரணை பிரிவு பத்தரமுல்லை சிறுவர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved