Headlines News :
Pin It

Widgets

Home » » மாணவனுடன் உறவு கொண்டு கர்ப்பம் தரித்த ஆசிரியை கைது!

மாணவனுடன் உறவு கொண்டு கர்ப்பம் தரித்த ஆசிரியை கைது!

அமெரிக்காவில் தன்னிடம் படித்த 14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமாகிய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

அவரது பெயர் அமன்டா சோடலோ. திருமணமானவர். டெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இவரிடம் படித்த 14 வயது மாணவன் ஒருவனுடன் ஆசிரியைக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் மாணவனுடன் உறவும் வைத்துக் கொண்டார். அடிக்கடி உறவு கொண்டதால் கர்ப்பமானார்.

பல மாதங்கள் இந்த உறவு நீடித்ததாம். இந்த உறவு குறித்து அந்த மாணவன் தனது சக மாணவர்களிடம் கூறியுள்ளான். அது அப்படியே பரவி வெளியில் வந்து விட்டது. இதையடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது தான் பள்ளி மாணவனுடன் உறவு கொண்டதையும், அதனால் கர்ப்பமானதையும் ஒத்துக் கொண்டார் ஆசிரியை.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 36 வயதாகும் இந்த ஆசிரியைக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விசாரணையின்போது ஆசிரியையுடன் வாரம் ஒரு முறையாவது உறவு வைத்து வந்ததாக அந்த மாணவனும் கோர்ட்டில் கூறினான்.

ஆசிரியையின் வீட்டில் வைத்து இந்த உறவுகள் தொடர்ந்துள்ளன. கடந்த ஜூலை மாதம்தான் முதல் முறையாக இருவரும் உறவு கொண்டனராம். அதன் பின்னர் வாராவாரம் உறவு தொடர்ந்ததாம்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved