இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 34 வயது மேஜர் வி.குமார் சிங்கள யுவதி
ஒருவரை திருமணம் செய்கின்றமைக்காக அங்கு உயர் நீதிமன்றத்தில் வழக்குத்
தாக்கல் செய்து உள்ளார்.
பங்களூரில் பட்டப் பின் படிப்பு படிக்க வந்த 29 வயது ரணமலி குணரட்ண என்கிற யுவதி மீதுதான் இவருக்கு காதல் ஏற்பட்டது.
ஆனால் இந்திய இராணுவத்தில் இருப்பவர் வெளிநாட்டுப் பிரஜாவுரிமை உடையவரை மணக்க முடியாது என்பது சட்டம்.
ஆனால் பிரஜாவுரிமையை விட்டுக் கொடுக்க இலங்கை யுவதி தயார் இல்லை.
இந்நிலையில் பதவி விலகல் கடிதத்தை இராணுவத்துக்கு சமர்ப்பித்து உள்ளார் குமார்.
ஆனால் இவரின் இராஜினாமாவை ஏற்க இராணுவம் மறுத்து உள்ளது. இவர் கட்டாய ஊழிய காலத்தை இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என்கிறது இராணுவம். அத்துடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருடன் ஏற்படுத்தி இருக்கின்ற அங்கீகரிக்கப்படாத தொடர்பு குறித்து மேலதிகாரிகளுக்கு அறிவிக்க இவர் தவறி விட்டார் என்று குற்றம் கண்டு பிடித்து விசாரித்தும் வருகின்றது.
இவரின் இராஜினாமாவை இராணுவம் ஏற்க மறுத்தமையை தவறு என தனி நபர் நீதிபதி ஏற்கனவே பிரகடனப்படுத்தி உள்ளார். ஆனால் வெளிநாட்டு பிரஜை ஒருவருடன் அங்கீகரிக்கப்படாத தொடர்பு வைத்திருந்தமை, இத்தொடர்பு குறித்து இராணுவத்துக்கு அறிவிக்க தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவம் இவரை விசாரிக்கலாம் என அறிவித்தார்.
ஆனால் இராஜினாமாவை ஏற்க மறுத்தமை தவறு என ஏற்றுக் கொள்ள பாதுகாப்பு அமைச்சு மறுத்து உள்ளது. இதனால் இருவர் கொண்ட நீதிபதிகள் குழு முன் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டுமென மேன்முறையீடு செய்து உள்ளது.
இந்நிலையில் நீதிபதிகளான பிரதம நீதியரசர் விக்கிரமஜித் சென், நீதியரசர் வி.வி. நாகரட்ணா ஆகியோரைக் கொண்ட குழு முன் இவ்வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை செவிமடுக்கப்பட்டது.
இந்திய இராணுவம் காதல் திருமணத்துக்கு எதிரானதா? கண்டதும் காதல் ஏற்படுவதை இந்திய இராணுவம் ஏற்காதா? என்று நீதிபதிகள் குழு வினவியது.
இந்திய ஜனாதிபதியாக இருந்த கே. ஆர். நாராயணன் மியன்மார் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இந்தியாவில் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதியே ஆவார். இதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
இருப்பினும் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேஜர் குமார் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். கடந்த வருடம்தான் காதலியைச் சந்தித்து இருக்கின்றார். இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தனர். ஆனால் இவரின் இராஜினாவை இராணுவம் ஏற்க மறுத்தமையால் திருமணத்தை தள்ளி வைத்து விட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டு விட்டது.
2000 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்தவர் குமார். இராணுவத்துக்கு இவரால் ஏற்பட்டு இருக்கக் கூடிய செலவுகளை முழுமையாக கொடுக்க தயாராகவெ உள்ளார்.
பங்களூரில் பட்டப் பின் படிப்பு படிக்க வந்த 29 வயது ரணமலி குணரட்ண என்கிற யுவதி மீதுதான் இவருக்கு காதல் ஏற்பட்டது.
ஆனால் இந்திய இராணுவத்தில் இருப்பவர் வெளிநாட்டுப் பிரஜாவுரிமை உடையவரை மணக்க முடியாது என்பது சட்டம்.
ஆனால் பிரஜாவுரிமையை விட்டுக் கொடுக்க இலங்கை யுவதி தயார் இல்லை.
இந்நிலையில் பதவி விலகல் கடிதத்தை இராணுவத்துக்கு சமர்ப்பித்து உள்ளார் குமார்.
ஆனால் இவரின் இராஜினாமாவை ஏற்க இராணுவம் மறுத்து உள்ளது. இவர் கட்டாய ஊழிய காலத்தை இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என்கிறது இராணுவம். அத்துடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருடன் ஏற்படுத்தி இருக்கின்ற அங்கீகரிக்கப்படாத தொடர்பு குறித்து மேலதிகாரிகளுக்கு அறிவிக்க இவர் தவறி விட்டார் என்று குற்றம் கண்டு பிடித்து விசாரித்தும் வருகின்றது.
இவரின் இராஜினாமாவை இராணுவம் ஏற்க மறுத்தமையை தவறு என தனி நபர் நீதிபதி ஏற்கனவே பிரகடனப்படுத்தி உள்ளார். ஆனால் வெளிநாட்டு பிரஜை ஒருவருடன் அங்கீகரிக்கப்படாத தொடர்பு வைத்திருந்தமை, இத்தொடர்பு குறித்து இராணுவத்துக்கு அறிவிக்க தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவம் இவரை விசாரிக்கலாம் என அறிவித்தார்.
ஆனால் இராஜினாமாவை ஏற்க மறுத்தமை தவறு என ஏற்றுக் கொள்ள பாதுகாப்பு அமைச்சு மறுத்து உள்ளது. இதனால் இருவர் கொண்ட நீதிபதிகள் குழு முன் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டுமென மேன்முறையீடு செய்து உள்ளது.
இந்நிலையில் நீதிபதிகளான பிரதம நீதியரசர் விக்கிரமஜித் சென், நீதியரசர் வி.வி. நாகரட்ணா ஆகியோரைக் கொண்ட குழு முன் இவ்வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை செவிமடுக்கப்பட்டது.
இந்திய இராணுவம் காதல் திருமணத்துக்கு எதிரானதா? கண்டதும் காதல் ஏற்படுவதை இந்திய இராணுவம் ஏற்காதா? என்று நீதிபதிகள் குழு வினவியது.
இந்திய ஜனாதிபதியாக இருந்த கே. ஆர். நாராயணன் மியன்மார் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இந்தியாவில் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதியே ஆவார். இதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
இருப்பினும் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேஜர் குமார் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். கடந்த வருடம்தான் காதலியைச் சந்தித்து இருக்கின்றார். இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தனர். ஆனால் இவரின் இராஜினாவை இராணுவம் ஏற்க மறுத்தமையால் திருமணத்தை தள்ளி வைத்து விட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டு விட்டது.
2000 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்தவர் குமார். இராணுவத்துக்கு இவரால் ஏற்பட்டு இருக்கக் கூடிய செலவுகளை முழுமையாக கொடுக்க தயாராகவெ உள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !